கொரோனா சிகிச்சைக்கு ஆஸ்பிரின்: ஆய்வு மேற்கொள்ள பிரிட்டன் முடிவு
விலையும் அதிகமில்லை. எளிதில் கிடைக்க கூடியது என கூறுகிறார்.

பரிசோதனை முயற்சியாக, ஆஸ்பிரின் என்ற வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் மருந்துகளை கொரோனா பாதிப்பு சிகிச்சைக்கு பயன்படுத்துவது பற்றி ஆய்வு மேற்கொள்ளப் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதுபற்றி பரிசோதனை ஆய்வாளர்களில் துணை தலைவராக உள்ள பீட்டர் ஹார்பி என்பவர் கூறும்பொழுது, இந்த மருந்து (ஆஸ்பிரின்) பலன் அளிக்கும் என நம்புவதில் தெளிவான நிலை காணப்படுகிறது. இது பாதுகாப்பு நிறைந்தது. விலையும் அதிகமில்லை. எளிதில் கிடைக்க கூடியது என கூறுகிறார்.
இதனை தொடர்ந்து, பரிசோதனை முயற்சியாக நாள் ஒன்றுக்கு 150 மி.கிராம் ஆஸ்பிரினை குறைந்தது 2 ஆயிரம் நோயாளிகளுக்கு வழங்கி சோதனை செய்ய உள்ளனர். அவர்களிடம் பெறப்படும் தரவுகளை கொண்டு, பிற முறைகளில் கொரோனா பாதிப்புகளுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் அதிகப்படியான அளவில் இந்த மருந்துகளை எடுத்து கொள்வது உடல் நலனுக்கு ஆபத்து என்றும் கூறப்படுகிறது.