திருமணத்திற்கு பின் சுமார் 6 வருடங்கள், படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா மீண்டும் '36 வயதினிலே'படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அடுத்து 'மகளிர் மட்டும்', 'நாச்சியார்', 'செக்கச்சிவந்த வானம்' என்று தொடர்ச்சியாக நடித்து வந்த ஜோதிகா இந்த ஒரு வருடத்தில் மட்டும் இதுவரை மூன்று படங்களில் நடித்து முடித்து விட்டார். அரசுப் பள்ளி ஆசிரியையாக அவர் நடித்திருந்த 'ராட்சசி' படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ஜோதிகா நடிக்கும் அடுத்த படத்தையும் சூர்யா தயாரிக்கிறார். இப்படத்தை ஜெ.ஜெ.பெட்ரிக் இயக்குகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டிலை படக்குழு இன்று வெளியிட்டது. அதன்படி இப்படத்திற்கு 'பொன்மகள் வந்தாள்' என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.