வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் சமீரா ரெட்டி. வேட்டை, அசல், வெடி என படங்களில் நடித்து பிரபலமானார். சமீராவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
பாலிவுட் படத்தில் நடித்த போது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை தற்போது பகிர்ந்துள்ளார். பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று லிப்லாக் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்றார்கள். இதை முதலில் ஏன் சொல்லவில்லை என்று கேட்டேன்.
நீங்க ஏற்கனவே முசாபிர் படத்தில் அவ்வாறு நடித்திருக்கிறீர்களே? அதனால் இதிலும் அப்படி நடியுங்கள் என்றார்கள். ஒரு படத்தில் செய்தால், அதை ஒவ்வொரு படத்திலும் செய்ய வேண்டுமா? என கேட்டேன். அவ்வாறு நடிக்கவில்லை என்றால் உங்களை மாற்றி விடுவோம் என்று கூறினார்கள்.
மற்றொரு படத்தில், அந்த படத்தின் ஹீரோ, உங்களுடன் நடிப்பது போர் அடிக்கிறது, நீங்கள் ஜாலியாக இருப்பதில்லை என சொன்னார். இனிமேல் என்னுடன் நடிக்காதீர்கள் என்றும் கூறினார். அவர் கூறியபடியே பின்னர் அவருடன் நடிப்பதில்லை என்றும் சமீரா ரெட்டி கூறினார்.