நடிகர் பிரகாஷ்ராஜ் பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்தார். அதன்படி பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கி உள்ளார்.
அவருக்கு தேர்தல் சின்னமாக விசில் சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை வைத்துக்கொண்டு தினமும் பிரசாரம் செய்து வருகிறார்.
நிருபர்களிடம் பேசிய அவர்,
பெங்களூர் மத்திய தொகுதியில் நான் வெற்றி பெற்றால் சிறந்த மக்கள் பிரதிநிதியாக செயல்படுவேன். தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றுவேன்.
நான் எம்.பி.யாக தேர்வு ஆகிவிட்டால் ஏதோ ஒரு கட்சியில் போய் சேர்ந்து விடுவேன் என்று சொல்கிறார்கள். அதில் உண்மையில்லை. நான் இந்த தொகுதியில் வெற்றி பெற்றால் எந்த ஒரு கட்சியிலும் போய் சேர மாட்டேன். சுயேட்சையாகவே நீடிப்பேன்.
நான் வெற்றி பெற்றால் மக்களுக்கு என்னென்ன தேவையோ அனைத்தையும் செய்து தருவேன். தோல்வி அடைந்தால் மக்கள் பிரதிநிதிக்குரிய பணியை செய்வேன் என்றும் கூறினார்.