இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை, 'தலைப்புச் செய்தியாக கமலின் கட்சி வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அவரால் ஒருபோதும் தலைவராக முடியாது. "50 ஆண்டுகளாக போன்சாய் மரமாக இருந்துவிட்டு, தற்போது ஆலவிருட்சமாக வளர்வேன்" என்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.
நடிகர்கள் வந்துதான் தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டும் என அவசியம் இல்லை. அனைத்து அரசியல் தலைவர்களும் களத்தில் இருக்கிறார்கள். திரைப்படப் போட்டியைப் போல சகோதரர் கமல், அவசர அவசரமாகக் கட்சியைத் தொடங்குகிறார்' என்றார்
இதற்கு முன்பு காகிதப்பூக்கள் மலரலாம் ஆனால் அது மணம் வீசாது என்று திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் முரசொலியில் எழுதியிருந்தார். இதற்கு பதிலளித்த கமலகாசன் நான் இப்போது விதையாக இருக்கிறேன் என்று பதில் கூறியிருந்தார்.