தங்கள் பகுதியில் அத்துமீறி நுழைந்த 3 அமெரிக்க விமானங்களை வெளியேற்றியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறித்த அமெரிக்க விமானங்கள் ரஷ்யாவின் கருங்கடல் பகுதியில் நுழைந்த நிலையில் அவற்றை ரஷ்யாவின் ஜெட் விமானங்கள் வழிமறித்து, எல்லையை விட்டு வெளியேற்றியதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, அமெரிக்க இராணுவத்துக்குச் சொந்தமான Poseidon ரக போர் விமானமும், RC-135 உளவு விமானமும் மற்றும் எரிபொருள் நிரப்பும் விமானமும் ரஷ்ய எல்லைக்குள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவற்றை ரஷ்யாவின் SU-30 ரக ஜெற் விமானங்கள் வழிமறித்ததுடன், ரஷ்ய எல்லையை விட்டு வெளியேறும் வரை அமெரிக்க விமானங்களை பின்தொடர்ந்து சென்றதாகவும் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்னது.