அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை நோக்கி செல்கிறது என எதிர்கட்சியினர் கூறும் குற்றச்சாட்டு தீயநோக்கம் கொண்ட பொய் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
சர்வாதிகாரம் குறித்துப் பேசுபவர்கள் உண்மையில் அறிவற்றவர்கள். நாங்கள் ஒருபோதும் சர்வாதிகாரிகளாக இருந்ததில்லை. கடந்த ஆட்சியின் போதே சர்வாதிகார போக்குகள் காணப்பட்டன. தலைவர்கள் தாங்கள் விரும்பிய விதத்தில் நடந்துகொண்டனர். போலியான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் யுத்தவீரர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் நலனுக்கு ஏற்றவிதத்தில் சட்டங்களை இயற்றியதுடன், தீய நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். மக்களின் உணர்வுகளை முற்றாக புறக்கணித்தார்கள் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.