இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை தொடர வேண்டும் என சிறிலங்கா பிரதமர் மகிந்தராஜபக்சே வலியுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்தில் புதன்கிழமை விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை தவறானது எனக் கூறி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து சிறிலங்காவின் பிரதமர் மகிந்த ராஜபக்சே கருத்து தெரிவித்துள்ளார்.
"சிறிலங்கா அரசு விடுதலைப் புலிகளை தோற்கடித்து அதன் மிருகத்தனமான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது." எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், "விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் உலகம் முழுவதும் செயல்பட்டு வருகின்றனர். எந்தவொரு நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் அவர்கள் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை இங்கிலாந்து அரசு தொடரும் என்று நம்புகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.