
மட்டக்குளி, சமித்புர பகுதிகளில் இராணுவத் தளபதியின் உத்தரவின் பேரில் விசேட பாதுகாப்பு பிரிவினர் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இராணுவத்தினரையும் காவல்துறையினரையும் உள்ளடக்கிய விசேட பிரிவினர் இந்தப் பகுதிகளில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என கொரோனா தடுப்பு செயலணி தெரிவித்துள்ளது.
கொட்டாஞ்சேனை, கொட்டாஞ்சேனை கிழக்கு, புளுமென்டால், லங்காபுர பகுதிகளிலும் விசேட பிரிவொன்றை நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அருகிலுள்ள பகுதிகளில் கொரோனா பரவுவதைக. கட்டுப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.