
சிறிலங்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ நாட்டில் இருந்து இன்று பிற்பகல் வெளியேறியுள்ளார்.
மைக் பொம்பியோ நேற்றிரவு சிறிலங்காவுக்கு வருகை தந்திருந்த நிலையில், இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 1.06 மணியளவில் விசேட விமானத்தின் ஊடாக மாலைதீவை நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
சிறிலங்கா வருகையின்போது, மைக் பொம்பியோ, பிரதமர் மஹிந்த ராஜபக்சவையும் சந்திக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால், மஹிந்தவுடனான சந்திப்பை இரத்துச் செய்துவிட்டு அவர் மாலைதீவு கிளம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.