Home » சட்டம் & அரசியல் » காவல்துறையினர் பொய்யான கைதுகளை செய்துள்ளதாக நீதி அமைச்சர் குற்றச்சாட்டு

காவல்துறையினர் பொய்யான கைதுகளை செய்துள்ளதாக நீதி அமைச்சர் குற்றச்சாட்டு

சந்தேகக் குற்றவாளிகளிடமிருந்து அவர்கள் கைப்பற்றிய பொருட்கள் போதைப்பொருள் அல்ல என்று அமைச்சர் கூறினார்.

👤 Sivasankaran18 March 2023 11:17 AM GMT
காவல்துறையினர் பொய்யான கைதுகளை செய்துள்ளதாக நீதி அமைச்சர் குற்றச்சாட்டு
Share Post

பொலிஸ் அதிகாரிகள் சிலர் போதைப்பொருள் பாவனை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் போலியாக கைது செய்யப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று குற்றம் சுமத்தியுள்ளார்.

"காவல்துறையினர் சமீப காலமாக போதைப்பொருள் வைத்திருந்ததற்காக பெருமளவிலான பேர்களைக் கைது செய்துள்ளனர். ஆனால் சந்தேகக் குற்றவாளிகளிடமிருந்து அவர்கள் கைப்பற்றிய பொருட்கள் போதைப்பொருள் அல்ல என்று அமைச்சர் கூறினார்.

"உண்மையான கைதுகள் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளன. சந்தேகக் குற்றவாளிகளிடம் இருந்து "பனடோல்" தூள் கண்டுபிடிக்கப்பட்ட சந்தர்ப்பங்கள் உள்ளன. பழிவாங்கும் நடவடிக்கையாக காவல்துறைக்கு தவறான குறிப்புகள் வழங்கப்பட்ட நிகழ்வுகளும் உள்ளன. நிலைமையைக் கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளோம்" என அமைச்சர் உறுதியளித்தார்.