அரசமைப்பின் 19ஆம் திருத்தத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்று சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
அரசமைப்பின் 19ஆம் திருத்தத்தை முழுமையாக நீக்க வேண்டும் என்று வடமாகாண முன்னாள் ஆளுநரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
19ஆம் திருத்தமானது அரசாங்கத்தையும் அரசையும் சாய்த்து வீழ்த்தி விடும் நிலையை ஏற்படுத்தியது. 19ஆம் திருத்தத்தை உருவாக்கியமை தவறல்ல. ஆனால் அதனை உருவாக்கிய விதம், உருவாக்கப்பட்ட வேகம் தான் இன்று நாட்டில் பல சிக்கல்களை தோற்றுவித்துள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.