
20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகச் சந்திப்பில் அவர் இன்று இதனைக் கூறியுள்ளார்
விரைவில் புதிய அரசியல் யாப்பினை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ள நிலையில், இரண்டு தடவைகள் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லுவது பொதுமக்களின் பணத்தை வீணாக்கும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.