சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் பனித் திருவிழா
சீனாவின் பழமையான ஹர்பின் நகரில் பனித் திருவிழா நடத்தப்பட்டு வருகின்றது. உலகின் மிகப் பெரிய பனித்...
👤 Sivasankaran5 Jan 2019 3:12 PM GMT

சீனாவின் பழமையான ஹர்பின் நகரில் பனித் திருவிழா நடத்தப்பட்டு வருகின்றது. உலகின் மிகப் பெரிய பனித் திருவிழாவை கண்டு களிக்க சுற்றுலாப் பயணிகள் வந்து குவிகின்றார்கள். 1983 ஆம் ஆண்டிலிருந்து பனித்திருவிழா நடத்தப்பட்டு வருகின்றது.
பனி உறைந்து போயிருக்கும் Soungha ஆற்றில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பனி சிற்பங்கள் வரிசையாக அலங்கரிக்கப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் நடத்தப்படும் பனித்திருவிழா சுமார் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கும் என்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.
பல்வேறு பனிச் சிற்பங்கள் பார்ப்போரைக் கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், உயிரை உருக வைக்கும் பனிக்குளத்தில் நீச்சல் போட்டியும் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire