ஈழத்தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த ராணுவ அதிகாரி
லண்டனில் இலங்கை தூதரகத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய இலங்கை தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் இலங்கை ராணுவ அதிகாரி ஒருவர் கழுத்தைவெட்டிவிடுவோம் என்று சைகை மூலம் காட்டிய வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

இலங்கை சுதந்திர தினம் பிப்ரவரி 4-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி லண்டனில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தில் இதற்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
லண்டனில் உள்ள இலங்கை மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு இலங்கை அரசுக்கு எதிரான வாசகங்களுடன் கூடிய பதாகைகளை ஏந்திக் கொண்டு கூடியிருந்த இலங்கை மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2009 ஆம் ஆண்டில் இலங்கை உள்நாட்டுப் போரில் நடந்த இன அழிப்பு குறித்தும் தற்போது தமிழர்களின் பகுதியில் உள்ள இலங்கையின் ரகசிய ராணுவ முகாம்களுக்கும் கண்டனம் தெரிவித்து குரல்கள் எழும்பின.
அப்போது இலங்கை தூதரக அதிகாரிகளுடன் நின்று கொண்டிருந்த இலங்கை ராணுவ அதிகாரி ஒருவர் இலங்கை தமிழர்களை நோக்கி கழுத்தை அறுத்துவிடுவோம் என்ற தொனியில் சைகை மூலம் மிரட்டல் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. இலங்கை ராணுவ அதிகாரியின் இந்த செய்கைக்கு பல தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
லண்டனில் கடந்த 4 ஆம் தேதி நடந்த இந்த நிகழ்ச்சியை லண்டனைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்கள் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜனவரி 18 ஆம் தேதி மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் இலங்கை ராணுவத்தின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளுடன் கூடிய அறிக்கை ஒன்றி வெளியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/NSyMO3gZ3rs" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>ஈழத்தமிழர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த ராணுவ அதிகாரி