Home » மருத்துவம் & சுகாதாரம் » தலைவலியைத் தீர்க்க உதவும் கரிசலாங்கண்ணிக் கீரை - சோம்புக் கசாயம்

தலைவலியைத் தீர்க்க உதவும் கரிசலாங்கண்ணிக் கீரை - சோம்புக் கசாயம்

150 மி.லி அளவாகச் சுண்ட வைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு குடிக்கவும்.

👤 Sivasankaran22 March 2020 12:33 PM GMT
தலைவலியைத் தீர்க்க உதவும் கரிசலாங்கண்ணிக் கீரை - சோம்புக் கசாயம்
Share Post

தேவையான பொருட்கள்

கரிசலாங்கண்ணிக் கீரை - ஒரு கைப்பிடி

சோம்பு. - ஒரு ஸ்பூன்

மிளகு. - 10

மஞ்சள் தூள். - சிறிதளவு


செய்முறை

முதலில் கரிசலாங்கண்ணிக் கீரையை நன்றாக கழுவி ஆய்ந்து கொள்ளவும். மிளகை தூள் செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 500 மி.லி அளவு தண்ணீர் ஊற்றி அதில் கீரை , சோம்பு மிளகுத் தூள் மற்றும் மஞ்சள் தூளையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்து நீரை 150 மி.லி அளவாகச் சுண்ட வைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு குடிக்கவும்.

இந்தக் கசாயத்தைத் தொடர்ந்து தலைவலியினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கசாயத்தை தினமும் ஒருவேளை வெறும் வயிற்றில் 48 நாட்களாவது குடித்து வந்தால் தீராத தலைவலி தீரும்.

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.