Home » மருத்துவம் & சுகாதாரம் » வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால், மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாக குறையும்.

👤 Sivasankaran22 Jun 2019 8:54 AM GMT
வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
Share Post

வெந்நீர் குடித்த உடனேயே நம் உடலின் வெப்பநிலை உயருகிறது. பின்னர் வியர்வையாக மாறி உடம்பை விட்டு வெளியேறுகிறது. வியர்வையில் உடம்பில் உள்ள நச்சுத் தன்மைகள் வெளியேற்றப்பட்டு, உடலும் சுத்தமாகின்றது.

தினமும் காலையில் மிதமான சுடுநீரைக் குடித்து வந்தால் கொழுப்புக்கள் சரசரவென்று குறைந்து, எடையும் குறையும். ஒரு சொட்டு எலுமிச்சை சாற்றையும் சுடுநீருடன் சேர்த்துக் கொண்டால் அது உடம்பில் மேலும் கொழுப்பு சேர விடாமல் தடுக்கும்.

வெந்நீரை தொடர்ந்து குடித்து வந்தால் பருக்கள் வராது. முகமும் பளபளக்கும். அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் முடிகள் நன்றாக வளர்வதுடன், முடிகளின் வேர்களும் சுறுசுறுப்பாகி, மேலும் முடிகள் வளர வழி வகுக்கும்.

நம் உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லையென்றால், அது பலவிதமான உடல் நலக் குறைவுகளை உண்டாக்கும். ஆனால், வெந்நீரைத் தொடர்ந்து குடித்து வந்தால், இரத்த ஓட்டம் சீராகும். மேலும் நரம்பு மண்டலத்தின் ஓரத்தில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களும் வெந்நீரில் கரைந்து விடும்.

மலச்சிக்கலும் நீர்ச்சத்து குறைவும் குடல் இயக்கத்துக்கு முக்கிய எதிரிகள். மிதமான சூட்டில் நீரை தினமும் காலையில் காலி வயிற்றில் குடித்து வந்தால், குடல் இயக்கம் அதிகரிக்கும்.

மாதவிடாய் ஏற்படும் நாட்களில் பெண்கள் பெரிதும் வலியால் அவதிப்படுவார்கள். அந்த சமயங்களில் சூடான நீரை அடிக்கடி குடித்து வந்தால், மாதவிடாயினால் ஏற்படும் வலி வெகுவாக குறையும்.