பாலியல் குற்றச்சாட்டு - இலங்கையில் சந்தேகநபரை தேடும் பொலிசார்
பொலிசார் அவர் கனடாவில் அல்லது இலங்கையில் இருப்பதாக நம்புவதாக தெரிவித்தனர்.

பாலியல் குற்றச்சாட்டு, பாலியல் செயற்பாடுகளில் குழந்தைகளை ஈடுபடுத்தியமை தொடர்பாக இலங்கையில் உள்ள நபரை தேடி வருவதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து கிழக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆண்ட்ரூ அன்டன் என்ற நபரை பாலியல் குற்றச்சாட்டு, பாலியல் செயற்பாடுகளில் குழந்தைகளை ஈடுபடுத்தியமை போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக விசாரித்த வந்த பொலிசார் அவர் கனடாவில் அல்லது இலங்கையில் இருப்பதாக நம்புவதாக தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களின் மூலமாக அவர் இலங்கையில் இருப்பதை அறிந்து கொண்டதாக தெரிவித்த ஒட்டாவா பொலிசார் இருப்பினும் அதை விரிவாக விளக்கவில்லை.
கனடா போலிஸாரால் தேடப்பட்டுவரும் குறித்த நபர் தொடர்பாக தகவல்கள் தெரியாது என இலங்கை பொலிசார் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.