ஒன்ராறியோவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீடொன்று உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டிருந்தது. இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் குறித்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டிவியின் உதவியுடன் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகள் நடந்து வருகிறது.