சிறிலங்கா அதிபர் பதவிக்கு தேர்தல் - தேர்தல் கமிஷன் அறிவித்தது
இந்த நிலையில் அதிபர் தேர்தல் நவம்பர் 15-ம் திகதி முதல் டிசம்பர் 7-ம் திகதிக்குள் நடத்தப்படும்.

சிறிலங்காவின் அதிபராக மைத்ரியபால சிறிசேனா கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரி 5-ம் திகதி தேர்வு செய்யப்பட்டார். அவர் ராஜபக்சேவை வீழ்த்தி இலங்கை அதிபரானார். சிறிசேனாவுக்கு 51.28 சதவீத ஓட்டுகளும், ராஜபக்சேவுக்கு 47.58 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன.
அதிபர் சிறிசேனாவின் 5 வருட பதவி காலம் அடுத்த ஆண்டு (2020) ஜனவரி 8-ம் திகதியுடன் முடிவடைகிறது.
அதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு சிறிலங்கா அதிபர் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். தேர்தல் தொடர்பாக அந்நாட்டு தேர்தல் கமிஷன் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.
இந்த நிலையில் அதிபர் தேர்தல் நவம்பர் 15-ம் திகதி முதல் டிசம்பர் 7-ம் திகதிக்குள் நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக தேர்தல் கமிஷன் சேர்மன் மகிந்தா தேஷ்பிரியா இன்று கூறியதாவது:-
சிறிலங்கா அதிபரின் பதவி காலம் முடிவதற்கு 1 மாதத்திற்கு முன்பு சிறிலங்கா அதிபர் தேர்தலை கண்டிப்பாக நடத்த வேண்டும். நவம்பர் 15-ம் திகதி முதல் டிசம்பர் 7-ம் திகதிக்குள் ஏதாவது ஒரு தேதியில் தேர்தல் நடத்தப்படும் என்று கூறினார்.