காலி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட விவசாயம், மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் பி ஹெரிசன்,
மரண தண்டனையை நிறைவேற்றுவதால் நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு தேட முடியாது. மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் தனிப்பட்ட ரீதியில் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறினார்.
மரண தண்டனையை நிறைவேற்றுவதால் நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்குமாக இருந்தால் உலகிலுள்ள பல நாடுகள் பிரச்சினைகளுக்கு தீர்வாக மரண தண்டனையை நிறைவேற்றும் என்றும் அமைச்சர் பி ஹெரிசன் கூறினார்.