ரொறன்ரோவில் துப்பாக்கி சூடு சம்பவம் - ஒருவர் உயிரிழப்பு
இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு, ஒருவர் காயமடைந்துள்ளார்.
👤 Sivasankaran10 Aug 2019 3:49 PM GMT

ரொறன்ரோவின் கிழக்கு யோரக் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில், ஒருவர் உயிரிழந்ததோடு, ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவத்தில், உயிரிழந்தவர் 29 வயதான கெவீன் ரெட்டிக் என பொலிஸார் அடையாளங் கண்டுள்ளனர். வகுண்டா பிளேஸ் மற்றும் ஓ'கானர் டிரைவில் நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் இருவரும் ரொறன்ரோவை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ள பொலிஸார், இதுகுறித்த விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire