பிரம்டனில் துப்பாக்கிச் சூடு சம்பவம் - நால்வரை தேடும் பொலிஸார்
உயிருக்கு ஆபத்தற்ற நிலையில் காணப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
👤 Sivasankaran28 Aug 2019 3:54 PM GMT

பிரம்டனில் கிளின்டன் வீதி மற்றும் ரூதர்போர்ட் வீதிப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11:20 அளவில் இந்த துப்பாக்கிசூட்டுச் சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பாக நால்வரைத் தேடி வருவதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்தினைச் சென்றடைந்த போது அங்கே ஆண் ஒருவர் காயங்களுடன் காணப்பட்டதாகவும், உயிருக்கு ஆபத்தற்ற நிலையில் காணப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு அவருக்கு ஏற்பட்டிருந்த காயம் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டதல்ல என்பதனை பின்னர் அறிந்து கொண்டதாக தகவல் வெளியிட்டுள்ள பொலிஸார், தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைவதற்கு முன்னர் சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire