என்னுடைய கைகளில் இரத்தக் கறைகள் இல்லை - சஜித்
காலை 4 மணிக்கு எழுந்ததிலிருந்து இரவு 12 மணி வரையில் அபிவிருத்தி வேலைகளில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று குருணாகலில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி எவருக்கும் எதிரான பேரணி இல்லை என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர் தன்னுடைய கைகளில் இரத்தக் கறைகள் இல்லை எனவும் தான் திருட்டு, கொள்ளை போன்ற செயல்களில் ஈடுபடவில்லை எனவும் தான் கொலைகாரர்கள் மற்றும் போதைப் பொருள் வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தான் தற்போது காலை 4 மணிக்கு எழுந்ததிலிருந்து இரவு 12 மணி வரையில் அபிவிருத்தி வேலைகளில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தான் தனது தூக்கத்தை குறைத்துக் கொண்டு தொடர்ந்தும் சேவை செய்வதாக உறுதி வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது ஐக்கிய தேசிய முன்னணியின் ஆதரவாளர்கள் மற்றும் மக்களின் வெற்றி பெறவே இந்த பேரணி எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே தனது எதிர்பார்ப்பு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் அனைவரது ஆசிர்வாதத்துடன் நாட்டை கட்டியெழுப்பும் பொறுப்பு தனக்கு வழங்கப்படும் என்பதே எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.