74-வது ஐ.நா. பொதுசபை கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில், 24-ம் திகதி முதல், 30-ம் திகதி வரை நடக்க இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அமெரிக்கா செல்கிறார்.
இந்த பயணத்தின் போது, வருகிற 23-ம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை, இம்ரான்கான் நேரில் சந்தித்து பேசுகிறார். அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்புவார் என தெரிகிறது.