Home » உலகச் செய்திகள் » முறையான கொள்கையொன்றின் கீழ் நாடு கட்டியெழுப்பப்படும் - அனுர குமார திஸாநாயக்க
முறையான கொள்கையொன்றின் கீழ் நாடு கட்டியெழுப்பப்படும் - அனுர குமார திஸாநாயக்க
முறையான கொள்கையொன்றின் கீழ் நாடு கட்டியெழுப்பப்படும் என்றார்.
👤 Sivasankaran6 Nov 2019 2:30 PM GMT

கண்டியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திஸாநாயக்க பேசினார். முறையான கொள்கையொன்றின் கீழ் நாடு கட்டியெழுப்பப்படும் என்றார்.
பிரதான சில துறைகளின் மூலம் இந்நாடு கட்டியெழுப்பப்பட வேண்டும். வறுமையிலிருந்து விடுபட்ட பொருளாதாரம் ஒன்று நமக்குத் தேவை. குழந்தைகள், இளைஞர்கள், வயோதிபர்கள், பெண்கள், விசேட தேவையுடையோர் ஆகிய அனைத்து பிரிவினருக்கும் பாதுகாப்பு மற்றும் எதிர்கால நம்பிக்கை உள்ள நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.
எமது பொது சேவையை செயல்திறன் மிக்கதாக மாற்ற வேண்டும். இவற்றுக்காக முறையான திட்டம் ஒன்றை தயாரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire