மாகாண சபை தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடத்துவதற்கு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சித் தலைவர்கள். தேர்தல் கண்காணிப்பு அமைப்பு மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு இடையில் இன்று (04) இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
பாராளுமன்ற தேர்தலை எதிர்வரும் வருடம் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதியளவில் நடத்தக் கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்ததாக அவர் இதன்போது தெரிவித்தார்.