சிறிலங்காவின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (வெள்ளிக்கிழமை) நிகழ்த்திய அக்ராசன உரையில், 'நாடாளுமன்றத்தை மக்கள் மதிக்கும் இடமாக நிச்சயம் மாற்றுவேன்' என்று கூறினார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, "பிளவுகளை விதைப்பதற்கு பதிலாக, மக்களை ஒன்றிணைக்க நாம் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்.
மேலும் நாடாளுமன்றத்தில் இன்று, தீவிரமான உரைகள் எதுவும் இல்லை. இந்த நாடாளுமன்றத்தை மீண்டும் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய இடமாக மாற்ற வேண்டும். அத்துடன் அதனை மக்கள் மதிக்கும் இடமாக மாற்றுவது இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பாகும்.
எங்கள் கொள்கைகளின்படி, தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.