சீனர்களுக்கு இ-விசாவை இந்தியத் தூதரகம் நிறுத்தி வைத்தது
இந்த வைரஸ் 20 நாடுகளுக்கு வேகமாக பரவியுள்ளது.

கொரோனா வைரசின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் சீன மக்களுக்கும், சீனாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவருக்கும் இ-விசா வழங்குவதை இந்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
வுஹான் நகரில் இருந்து பரவியுள்ள கொரோனா வைரசுக்கு இதுவரை 300க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர். 16 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்த வைரஸ் 20 நாடுகளுக்கு வேகமாக பரவியுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் படித்து வந்த இந்திய மாணவர்கள், இந்தியர்களை இரு விமானங்கள் மூலம் இந்திய அரசு அழைத்து வந்துள்ளது. ஏறக்குறைய அங்கிருந்து 650 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு டெல்லி அருகே மனேசரில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் இருந்து இந்தியா வந்துள்ள மாணவி உள்பட இருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு அவர்கள் இருவரும் தீவிரமான மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பீதி மெல்லப் பரவியுள்ளது. இதையடுத்து சீனாவிலிருந்து வரும் சீன மக்களுக்கும், சீனாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கும் விசா வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்த இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், "கொரோனா வைரஸ் போன்ற காரணங்களால் இந்தியாவுக்குச் செல்ல இ-விசா வழங்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. சீன பாஸ்போர்ட்டுடன், சீனாவைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்கெனவே இ-விசா வழங்கப்பட்டிருந்தால் அது செல்லாது என்றும் கூறியுள்ளது.