திட்டமிட்டபடி தேர்தலை நடத்துவோம் - கோட்டாபய
கொரோனாவினால் ஏற்பட்டுள்ள நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது....

கொரோனாவினால் ஏற்பட்டுள்ள நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. அதேபோல் ஏற்கனவே திட்டமிட்டப்படி பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 25ஆம் திகதி இடம்பெறும் என ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்துள்ளார்.
கொரோனாவைரஸ் நிலைமை தொடர்பில் சார்க் நாட்டுத் தலைவர்களுடன் விசேட சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இதன் பின்னர் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
பிராந்திய நாடுகளின் தலைவர்களுடன் கருத்து மற்றும் அனுபவங்களை பகிர்வதன் மூலம் கொரோனாவை தடுக்க முடியும். அத்துடன் பொறிமுறை ஒன்றை உருவாக்கி, வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார மற்றும் மக்கள் வாழ்க்கையை கட்டியெழுப்ப வேண்டும்.
இதேவேளை, கொரோனாவினால் ஏற்பட்டுள்ள நிலைமையை கட்டுப்படுத்த அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. அதேபோல் ஏற்கனவே திட்டமிட்டப்படி பொதுத் தேர்தல் அடுத்த மாதம் 25ஆம் திகதி இடம்பெறும் என்றார்.