சுலைமானி குறித்து தகவல்களை வழங்கியவருக்கு மரண தண்டனை - ஈரான் அறிவிப்பு
அமெரிக்க அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் அவர் பலியானார்.

சுலைமானி கொலைச் சம்பவத்தில் அமெரிக்காவின் சி.ஐ.ஏ., மற்றும் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டுக்கு உளவாளியாக செயல்பட்டவருக்கு ஈரான் மரண தண்டனை அவித்துள்ளது.
ஈரான் நாட்டின் குர்து படை கொமாண்டர் குவாசிம் சுலைமானி கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் திகதி தெஹ்ரான் விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார்.
அமெரிக்க அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் அவர் பலியானார்.
குவாசிம் சுலைமானி குறித்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ., மற்றும் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டுக்கு முக்கிய தகவல்களை வழங்கியதற்காக மக்முத் மவுசாவி மஜ்த் என்பவரை ஈரான் பொலிஸ் கைது செய்தது.
விசாரணையில் சுலைமானி குறித்த தகவல்களை உளவு அமைப்புகளுக்கு அளித்தது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து மக்மூத் மவுசாவி மஜ்த்தை தூக்கிலிட முடிவு செய்திருப்பதாக ஈரான் நாட்டு நீதித்துறை செய்தி தொடர்பாளர் கோலாம் ஹூசைன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.