சமூகவளைதள மோகத்தால் குழந்தைகளை இழந்த தாய்
சீனாவில் கிழக்குப் பகுதி சுற்றுலாத்தளத்தில் உள்ள கடலில் இரண்டு சிறுமிகள் மூழ்கி இறந்துள்லனர். சிறுமியின் தாய் அலைபேசியில் சமூகவளைதளத்தில் மூழ்கி இருந்ததால் சிறுமிகள் கடலில் மூழ்கி இறந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
👤 Saravana Rajendran8 Aug 2018 4:33 PM GMT

இரட்டைக் குழந்தைகளான பை யுவான் சின், பெய் யுவான் டொங் ஆகிய இருவரும் அம்மாவோடு கடற்கரைக்கு உல்லாசப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
கடற்கரையில் அவர்கள் இருவரும் மணலில் விளையாடிக்கொண்டிருந்தனர். அவரது அன்னையோ அலைபேசியில் சமூக ஊடகத்தில் மூழ்கி இருந்ததார். இந்த நிலையில் சிறுமிகள் இருவரும் கடலில் சென்று விளையாட ஆரம்பித்தனர், அதில் பெரிய அலைவந்து இரு சிறுமிகளையும் இழுத்துச்சென்றது.
குழந்தைகள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்த நிலையில் கடற்கரையில் இரண்டு சிறுமிகளின் உடலையும் பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.
சிறுமிகள் கடலில் மூழ்கி இறந்த நிகழ்வு குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire