ஊவா மாகாண ஆளுநராக கீர்த்தி தென்னகோன் நியமனம்
இலங்கை - ஊவா மாகாண ஆளுநராக கஃபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் கீர்த்தி தென்னகோன்...
👤 Sivasankaran7 Jan 2019 12:05 PM GMT

இலங்கை - ஊவா மாகாண ஆளுநராக கஃபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் கீர்த்தி தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் ஆளுநராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
நாட்டில் கடந்த காலங்களில் ஊழல் மோசடிகளுக்கு எதிராக குரல்கொடுத்து வந்த கீர்த்தி தென்னகோன், தேர்தல் பிற்போடப்பட்டமை உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு எதிராக நீதிமன்றில் மனுக்களை தாக்கல் செய்து வந்தார். அத்தோடு, மனித உரிமை செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவந்தார். இந்நிலையில், அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire