Breaking News
தெற்கு கிளெங்கரி வாகன விபத்தில் 61 வயது முதியவர் பலி
அலெக்சாண்ட்ரியாவுக்கு தெற்கே கவுண்டி சாலை 25 இல் காலை 6 மணிக்குப் பிறகு நடந்த விபத்து குறித்து அதிகாரிகள் அழைக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஒன்ராறியோ மாகாண காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை காலை தெற்கு கிளெங்கரியில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அலெக்சாண்ட்ரியாவுக்கு தெற்கே கவுண்டி சாலை 25 இல் காலை 6 மணிக்குப் பிறகு நடந்த விபத்து குறித்து அதிகாரிகள் அழைக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தெற்கு கிளெங்கரியைச் சேர்ந்த 61 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது பெயரைக் காவல்துறையினர் வெளியிடவில்லை. மற்றொரு ஓட்டுநருக்கு கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று ஒன்ராறியோ மாகாணக் காவல்துறை தெரிவித்துள்ளது.