Breaking News
சீன கடற்படையின் போர்க்கப்பல் கொழும்பு வந்தடைந்தது
கொழும்பை வந்தடைந்த 129 மீற்றர் நீளம் கொண்ட கப்பலில் 138 பேர் கொண்ட பணியாளர்கள் உள்ளனர்.
சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் போர்க்கப்பலான ஹை யாங் 24 எச்ஏஓ (HAI YANG 24 HAO) ஆகஸ்ட் 10 காலை முறைப்படி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கொழும்பை வந்தடைந்த 129 மீற்றர் நீளம் கொண்ட கப்பலில் 138 பேர் கொண்ட பணியாளர்கள் உள்ளனர். இதற்கு கமாண்டர் ஜின் சின் தலைமை தாங்குகிறார்.
இதற்கிடையில், கப்பல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி தீவில் இருந்து புறப்பட உள்ளதாக சிறிலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.