மியன்மார் இணையவழிக் குற்றத்தடுப்பு முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட எட்டு இலங்கையர்கள் தாய்லாந்தை வந்தடைந்தனர்
மையவாடியில் உள்ள இணையவழிக் குற்ற முகாம்களில் சிக்கிய 56 இலங்கையர்களில் எட்டு பேர் மார்ச் மாத தொடக்கத்தில் மியான்மர் அரசாங்க அதிகாரிகளால் மீட்கப்பட்டு மையவாடி மத்திய காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர்.
மியன்மாரின் மையவாடி பிரதேசத்தில் உள்ள இணையவழிக் குற்ற முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட எட்டு இலங்கையர்கள் பாதுகாப்பாக தாய்லாந்தில் உள்ள சிறிலங்காத் தூதரகத்தை வந்தடைந்துள்ளனர்..
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தாய்லாந்துக்கான சிறிலங்காத் தூதுவர் ஜனக பண்டார, மீட்கப்பட்டவர்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
மையவாடியில் உள்ள இணையவழிக் குற்ற முகாம்களில் சிக்கிய 56 இலங்கையர்களில் எட்டு பேர் மார்ச் மாத தொடக்கத்தில் மியான்மர் அரசாங்க அதிகாரிகளால் மீட்கப்பட்டு மையவாடி மத்திய காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர்.
நேற்று (11) காலை பர்மிய குடிவரவு அதிகாரிகள் தாய்லாந்து-மியான்மர் நட்புறவுப் பாலத்தைக் கடந்து தாய்லாந்து அதிகாரிகளிடம் குழுவை ஒப்படைத்தனர்.
மீட்கப்பட்ட இலங்கையர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், தற்போது தாய்லாந்தில் உள்ள சிறிலங்காத் தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தூதுவர் பண்டார தெரிவித்தார்.