''எனக்கு சரித்திரம் கற்பிக்கப் பார்க்கிறீர்களா? தொல்பொருள் திணைக்கள அதிகாரியிடம் ரணில் கேள்வி
ஜனாதிபதி மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.
தொல்பொருள் இடமொன்றுக்கு காணி வழங்குவது தொடர்பான பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
ஜனாதிபதி தொல்பொருள் திணைக்கள அதிகாரியிடம் "நீங்கள் எனக்கு வரலாற்றை கற்பிக்க முயற்சிக்கிறீர்களா? அல்லது நான் உங்களுக்கு கற்பிக்க விரும்புகிறீர்களா?"
ஜனாதிபதி மற்றும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.
குறித்த தொல்பொருள் இடத்திற்காக சுமார் 270 ஏக்கர் காணியை கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்கள அதிகாரி கூறியபோது, அது மகா விகாரையை விட பெரியதா என ஜனாதிபதி அவரிடம் கேட்டார்.
"உங்களுக்கு ஏன் 275 ஏக்கர் வேண்டும்? இது மகாவிகாரையை விடப் பெரியதா? மகா விகாரை, ஜெதவனாராமயம், அபயகிரி மூன்றுமே 100 ஏக்கர் நிலம் வைத்திருக்காது" என்றார்.
அவர் ஜனாதிபதியால் கடுமையாக சாடப்பட்ட பின்னர், தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர். அனுர மனதுங்க தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளருக்கு கையளித்துள்ளார்.
“தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், கடிதத்தின் பிரதியும் எனக்குக் கிடைத்துள்ளது. ராஜினாமா செய்வதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை” என்று புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க டெய்லி மிரருக்கு தெரிவித்தார்.