Breaking News
ராயல் பார்க் கொலை வழக்கு: உரிய நடைமுறையை தான் பின்பற்றியதாக அதிபர் சிறிசேனா உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்
எப்போதும் நியாயமான முறையில் நடந்துகொண்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணி ஊடாக உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
ரோயல் பார்க் கொலைக் குற்றவாளி டொன் ஷ்ரமந்த ஜூட் அந்தோனி ஜயமஹாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கும் போது தாம் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியதாகவும் எப்போதும் நியாயமான முறையில் நடந்துகொண்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணி ஊடாக உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
டொன் ஷ்ரமந்த ஜூட் அந்தோனி ஜயமஹாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸ் முஸ்தபா மேற்கண்டவாறு தெரிவித்தார்.