ஜீ.எல்.பீரிசுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
ஐக்கிய மக்கள் சக்தியுடன் தேர்தல் உடன்பாடு ஒன்றை மேற்கொண்டமை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்றுக் குழுவினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிசுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் தேர்தல் உடன்பாடு ஒன்றை மேற்கொண்டமை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறைவேற்றுக் குழுவினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில், இப்போது சுதந்திர மக்கள் காங்கிரசின் (நிதஹச ஜனதா சபாவ) உறுப்பினர்களாக இருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிருப்தி கொண்ட ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, சமகி ஜன பலவேகயவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
பிரதான எதிர்க்கட்சிக்கும் நிதஹச ஜனதா சபாவவின் பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டிலான் பெரேரா, கலாநிதி நாலக கொடஹேவா, கே.பி.குமாரசிறி, கலாநிதி உபுல் கலப்பத்தி மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோருக்கிடையில் சமகி ஜன பலவேகய தலைமையிலான புதிய கூட்டணியான 'சமகி ஜன சந்தனய' என்ற புதிய கூட்டணியை உருவாக்குவதற்காக இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த எம்.பி.க்கள் பின்னர் கட்சியில் இருந்து விலகி சுயாதீனமாக சபையில் அமர்வதற்கு முடிவு செய்தனர். அவர்கள் சமீபத்தில் ஒரு புதிய கூட்டணியை உருவாக்கப் பிரதான எதிர்க்கட்சியுடன் ஒரு தேர்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.