Breaking News
78 வது ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை அமர்வின் போது ஜனாதிபதி வணிக வட்டமேசையில் பங்கேற்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நியூயோர்க்கில் இரண்டு முக்கிய நிகழ்வுகளில் தீவிரமாக பங்கேற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருடன் இணைந்து, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நியூயோர்க்கில் இரண்டு முக்கிய நிகழ்வுகளில் தீவிரமாக பங்கேற்றதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சர்வதேச புரிந்துணர்வுக்கான வர்த்தக சபை மற்றும் அமெரிக்காவில் உள்ள இலங்கைத் தூதரகம் இணைந்து ஏற்பாடு செய்த “இலங்கையில் பொருளாதார வாய்ப்புகள்” என்ற தலைப்பிலான உயர்தர வணிக வட்டமேசை கலந்துரையாடலில் ஜனாதிபதி விக்கிரமசிங்க பங்கேற்றார்.
2030 ஆம் ஆண்டளவில் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான புதிய உத்திகளை ஆராய்வதில் கவனம் செலுத்தி ஐ.நா தலைமையகத்தில் நேற்று ஆரம்பமான “நிலையான அபிவிருத்தி இலக்குகள் பற்றிய மாநாடு – 2023” இல் ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் பங்குபற்றினார்.