Breaking News
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் குறித்து விவாதம் நடத்தக் காங்கிரஸ் கோரிக்கை
விலைவாசி உயர்வு, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள விரிசல், எல்லை நிலைமை மற்றும் நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று காங்கிரஸ் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரின் போது, மக்களை மையமாகக் கொண்ட பிரச்சனைகளான வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள விரிசல், எல்லை நிலைமை மற்றும் நாட்டின் வெளியுறவுக் கொள்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று காங்கிரஸ் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், குளிர்காலக் கூட்டத் தொடருக்கான வியூகம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற வியூகக் குழுவின் தலைவர் சோனியா காந்தி தலைமையில், தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கலந்துகொண்டார்.