கவுரி லங்கேஷ் கொலை குற்றவாளிகளுக்கு கர்நாடகாவில் இந்து ஆதரவு அமைப்புகள் பிரமாண்ட வரவேற்பு
ஆறு ஆண்டுகள் சிறையில் கழித்த பரசுராம் வாக்மோர் மற்றும் மனோகர் யாதவ் ஆகியோருக்கு பெங்களூரு அமர்வு நீதிமன்றம் அக்டோபர் 9 ஆம் தேதி பிணை வழங்கியது.
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து அவர்களுக்கு இந்து அமைப்புகள் உற்சாக வரவேற்பு அளித்தன.
ஆறு ஆண்டுகள் சிறையில் கழித்த பரசுராம் வாக்மோர் மற்றும் மனோகர் யாதவ் ஆகியோருக்கு பெங்களூரு அமர்வு நீதிமன்றம் அக்டோபர் 9 ஆம் தேதி பிணை வழங்கியது.
விஜயபுராவில் உள்ள தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பியதும், உள்ளூர் இந்து சார்பு ஆதரவாளர்கள் அவர்களை மாலைகள், ஆரஞ்சு நிறச் சால்வைகள் மற்றும் கொண்டாட்ட கோஷங்களுடன் வரவேற்றனர். இருவரும் சத்திரபதி சிவாஜியின் சிலைக்கு அருகில் அழைத்துச் செல்லப்பட்டனர், அவர்கள் மாலை அணிவித்தனர். இதையடுத்து அவர்கள் காளிகா கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் விஜயபுராவுக்கு மீண்டும் வரவேற்கப்பட்டனர். அவர்களின் ஆதரவாளர்கள் அவர்கள் தவறாக சிறையில் அடைக்கப்பட்டதாகக் கூறினர்.