விசாரணைக் கேள்விக்கு பிரஜ்வால் ரேவண்ணா மழுப்பலான பதில்: ஆதாரங்கள்
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக மீண்டும் தேர்தலில் போட்டியிடும் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த தற்போதைய எம்.பி., ஜெர்மனியின் முனிச்சில் இருந்து விமானத்தில் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கியபோது மே 31 அன்று கைது செய்யப்பட்டார்.

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட கர்நாடக எம்.பி.யும், இடைநீக்கம் செய்யப்பட்ட மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான பிரஜ்வல் ரேவண்ணா, மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தலைமையிலான விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று வட்டாரங்கள் இந்தியா டுடே டிவிக்கு தெரிவித்தன. இதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கட்கிழமை குற்றம் நடந்த இடத்தில் விசாரணை நடத்த சிறப்பு[ புலனாய்வுக் குழு திட்டமிட்டுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக மீண்டும் தேர்தலில் போட்டியிடும் ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த தற்போதைய எம்.பி., ஜெர்மனியின் முனிச்சில் இருந்து விமானத்தில் பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கியபோது மே 31 அன்று கைது செய்யப்பட்டார். அவர் பல பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் ஆபாசக் காணொலிக் காட்சிகள் கர்நாடகாவில் பரவத் தொடங்கியதால் ஏப்ரல் மாதம் அவர் நாட்டை விட்டு வெளியேறினார்.
தொடர்ச்சியாக இரண்டு நாட்களாக, ரேவண்ணா சிறப்புப் புலனாய்வுக் குழுவின் கேள்விகளுக்கு மழுப்பலான பதில்களை அளித்ததாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த வழக்கு தனக்கு எதிரான சதி என்றும், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.