Breaking News
மூடா ஊழல் வழக்கில் சித்தராமையா மனைவிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய அழைப்பாணைக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை
ஜனவரி 28 ஆம் தேதி காலை 11 மணிக்கு பெங்களூரு அலுவலகத்திற்கு வருமாறு பார்வதிக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியது.

முடா ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையின் அழைப்பாணைக்குக் இடைக்காலத் தடை விதித்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பி.எம்.பார்வதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் பைரதி சுரேஷ் ஆகியோருக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் நிவாரணம் வழங்கியுள்ளது.
முன்னதாக, ஜனவரி 28 ஆம் தேதி காலை 11 மணிக்கு பெங்களூரு அலுவலகத்திற்கு வருமாறு பார்வதிக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியது. ஜனவரி 3 தேதியிட்ட முதல் உத்தரவு, ஜனவரி 9 ஆம் தேதி வர வேண்டும் என்று உத்தரவிட்டது.