சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை கண்டித்து தமிழகத்தில் உண்ணாவிரதப் போராட்டம்
சிறிலங்கா அரசு இனி மீனவர்களை கைது செய்யாது என்ற உத்தரவாதம் அளிக்கப்படும் வரையிலும் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும்
சிறிலங்கா கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தங்கச்சிமடம் மற்றும் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சனிக்கிழமை (பிப்ரவரி 24) தொடர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர்.
நமது மீனவர்கள் 5 பேரைச் சிறிலங்கா அரசு சிறையில் அடைத்துள்ளது. அவர்களுக்கு ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 8 நாட்களாக நாங்கள் கடலுக்குள் செல்லவில்லை" என்று மீனவர் தலைவர் பி.ஜேசு ராஜா ஐஏஎன்எஸ்சிடம் தெரிவித்தார்.
அனைத்து மீனவர்களையும் நிபந்தனையின்றி விடுவிக்கும் வரையிலும், சிறிலங்கா அரசு இனி மீனவர்களை கைது செய்யாது என்ற உத்தரவாதம் அளிக்கப்படும் வரையிலும் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று அவர் கூறினார்.
மீனவர் சங்கத் தலைவர்கள் பட்டினியால் இறந்தாலும் வேலை நிறுத்தம் தொடரும் என்று தெரிவித்தனர். மத்திய அரசு உடனடியாக தலையிட்டு விசைப்படகுகளுடன் மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று ஜேசு ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.