இந்தியப் பெருங்கடலின் கேந்திர நிலையமாக சிறிலங்காவுக்கு ஜப்பான் துணை நிற்கும்
இந்தியப் பெருங்கடலின் கேந்திர நிலையமாக சிறிலங்கா விரைவில் பொருளாதார அபிவிருத்தியை நோக்கிய பாதையில் மீண்டும் பயணிக்கும் என ஜப்பான் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக ஜப்பானிய தூதுவர் தெரிவித்தார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு இருதரப்பு உடன்படிக்கையை துரிதமாக நிறைவு செய்வதற்கான சிறிலங்கா அரசாங்கத்தின் நோக்கம் உறுதிப்படுத்தப்பட்டவுடன், தற்போதுள்ள 'யென் கடன் திட்டங்களை' விரைவாக மீண்டும் தொடங்குவதன் மூலம் சிறிலங்காவின் அபிவிருத்திக்கு மேலும் ஆதரவளிக்கும் ஜப்பானின் விருப்பத்தை ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகவ அவர்கள் தெரிவித்தார்.
தேசிய நல்லிணக்கத்திற்கான சிறிலங்காவின் தற்போதைய முயற்சிகளுக்கு தொடர்ந்து ஆதரவளிக்க ஜப்பானின் விருப்பத்தை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் நேற்று (04) பிற்பகல் நடத்திய கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய கமிகாவா, ஜப்பானின் விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
சிறிலங்கா தற்போது மேற்கொண்டு வரும் பல்வேறு சீர்திருத்தங்கள் அனைத்தும் சிறிலங்காவின் பொருளாதாரத்தை இயல்பாக்குவதற்கு அவசியமானவை என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஜப்பான், சிறிலங்கா ஆகிய இரு நாடுகளும் கடலால் சூழப்பட்ட தீவு நாடுகள். திறந்த இந்தோ-பசுபிக் பிராந்தியத்தை யதார்த்தமாக்குவதற்காக கடல்சார் துறையில் இலங்கையுடனான ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த ஜப்பான் எதிர்பார்ப்பதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கு மேலதிகமாக, சிறிலங்காவின் கோரிக்கையின் அடிப்படையில் கடல்சார் தரவு மற்றும் விளக்கப்படங்களைத் தொகுக்க பயன்படுத்த ஜப்பான் ஒரு ஆயுதக் கப்பலை வழங்கும் என்று அவர் வெளிப்படுத்தினார்.
இந்தியப் பெருங்கடலின் கேந்திர நிலையமாக சிறிலங்கா விரைவில் பொருளாதார அபிவிருத்தியை நோக்கிய பாதையில் மீண்டும் பயணிக்கும் என ஜப்பான் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக ஜப்பானிய தூதுவர் தெரிவித்தார்.
இந்த முயற்சியின் ஊடாக ஜப்பான் தொடர்ந்தும் சிறிலங்காவுடன் துணை நிற்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.