Breaking News
இலங்கை மின்சார சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை நிறைவு
விஜித் மலல்கொட, ஷிரான் குணரத்ன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் தொடர்ந்து 3 நாட்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

உத்தேச இலங்கை மின்சார சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் நிறைவடைந்துள்ளது.
இந்த தீர்ப்பை பாராளுமன்ற சபாநாயகருக்கு இரகசியமாக அறிவிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
விஜித் மலல்கொட, ஷிரான் குணரத்ன மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் தொடர்ந்து 3 நாட்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் செயலாளர் ரஞ்சன் ஜயலால் உட்பட 14 தரப்பினர் இந்த மனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.