பிரான்ஸில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணிடம் பிரபல திரைப்பட இயக்குனர் பல லட்சம் மோசடி
பிரான்ஸில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண்ணிடம் விடுதலை சிறுத்தைகள் பிரமுகரும், இயக்குனருமான கோபி நாயினார் பண மோசடி செய்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
இலங்கை தமிழரான சியாமளா, பிரான்ஸ் நாட்டில் வசித்து வருகிறார்.
சினிமா மீது ஆர்வம் கொண்ட தொழிலதிபரான சியாமளா, அறம் பட இயக்குனரும், விசிக பிரமுகருமான கோபி நயினார் மீது நேற்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பண மோசடி புகார் அளித்துள்ளார்.
செய்தியாளர்களை பேசிய சியாமளா, “சினிமா மீது கொண்ட ஆர்வம் காரணமாக தமிழ்நாட்டில் திரைப்படங்களை தயாரிக்க ஆசைப்பட்டேன்.
அதன்படி கடந்த 2018ஆம் ஆண்டு சினிமா நட்பு வட்டாரங்கள் மூலமாக ஆக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜின் அறிமுகம் கிடைத்தது.
அவர் தான் தமிழில் படங்களை தயாரிக்கலாம் என்றும், அதற்கு அவர் உதவுவதாகவும் தெரிவித்தார்.
அப்போது அவர் இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் நடிகர் ஜெய்-ஐ வைத்து கருப்பர் நகரம் என்ற திரைப்படத்தை தயாரித்து வருவதாகவும், அந்த படத்தில் இணைந்து தயாரிப்பாளராக செயல்படுமாறும் தெரிவித்தார்.
அதன் பேரில் 30 லட்சம் ரூபா பணம் கொடுத்த நிலையில், கொரோனா காலத்தில் படம் பாதியிலேயே நின்று விட்டதாக கூறினார்கள்.
இந்த நிலையில் கொடுத்த பணத்தை திருப்பி தராமல் விஜய் அமிர்தராஜ் மற்றும் கோபி நாயினார் ஆகியோர் மோசடி செய்துவிட்டனர்.
2019ஆம் ஆண்டு முதல் விஜய் அமிர்தராஜ் மற்றும் இயக்குனர் கோபி நயினார் இருவரும் எனது தொடர்பை முற்றிலுமாக துண்டித்துவிட்டனர்.
தமிழக முதல்வரும், காவல்துறையினரும் எனது பணத்தை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார்”.