14 ஆண்டுகள் பதவி வகித்த முன்னாள் நீதிபதி லூயிஸ் லெபலுக்கு உச்சநீதிமன்றம் இரங்கல்
தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உரிமைகள் பற்றிய அவரது வாதங்களும் எழுத்துகளும் தொடர்ந்து செல்வாக்கு செலுத்துகின்றன.
முன்னாள் நீதிபதி லூயிஸ் லெபல் தனது 83வது வயதில் வியாழக்கிழமை காலமானதையடுத்து, அவருக்கு கனடா உச்ச நீதிமன்றம் இரங்கல் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதம மந்திரி ஜீன் கிரெட்டியன் லூயிஸ் லெபலை 2000 ஆம் ஆண்டில் நாட்டின் மிக உயர்ந்த பதவிக்கு நியமித்தார். அவர் 2014 இல் ஓய்வு பெறும் வரை பணியாற்றினார்.
லெபல் 1984 இல் கியூபெக் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு நியமிக்கப்படுவதற்கு முன்பு கியூபெக் நகரத்தில் உள்ள காலேஜ் டெஸ் ஜெஸ்யூட்ஸ், யுனிவர்சிட் லாவல் மற்றும் ரொறன்ரோ பல்கலைக்கழகம் ஆகியவற்றிலிருந்து பட்டங்களைப் பெற்றார்.
அவர் கியூபெக்கில் தொழிலாளர் சட்டம் குறித்த முன்னணிக் குரலாகக் கருதப்பட்டார் மற்றும் தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உரிமைகள் பற்றிய அவரது வாதங்களும் எழுத்துகளும் தொடர்ந்து செல்வாக்கு செலுத்துகின்றன.
தலைமை நீதிபதி ரிச்சர்ட் வாக்னர் ஒரு அறிக்கையில், கியூபெக் சிவில் சட்டத்தின் மீதான அவரது அன்பு இணையற்றது, லெபெல் முன்மாதிரியான கூட்டாண்மை மற்றும் ஞானம் கொண்ட மனிதர் என்று கூறினார். லூயிஸ் லெபல் உச்ச நீதிமன்றத்தின் மீதான உயர்ந்த மரியாதையை நிரூபித்ததாகவும், நிர்வாக, தொழிலாளர் மற்றும் பன்னாட்டுச் சட்டங்களில் அவர் எழுதிய முடிவுகளில் அவரது புகழ் நிலைத்திருக்கும் என்றும் வாக்னர் கூறினார்.