Breaking News
இத்தாலி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் பலி
கட்டடத்தின் அடித்தளத்தில் ஏற்பட்ட தீ, அவசரச் சிகிச்சைப் பிரிவு மற்றும் தீவிரச் சிகிச்சைப் பிரிவுக்கும் பரவியது.
ரோமில் உள்ள டிவோலி நகரில் ஒரே இரவில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று முதியவர்கள் உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சான் ஜியோவானி எவாஞ்சலிஸ்டா மருத்துவமனையில் இரவு 10.30 மணியளவில் (21:30, கிரீன்வீச் நேரம்) நடந்த சம்பவம், மூன்று வயதானவர்களின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது என்று இத்தாலிய செய்தித்தாள் கொரியர் டெல்லா செரா (Corriere della Sera) தெரிவித்துள்ளது.
கட்டடத்தின் அடித்தளத்தில் ஏற்பட்ட தீ, அவசரச் சிகிச்சைப் பிரிவு மற்றும் தீவிரச் சிகிச்சைப் பிரிவுக்கும் பரவியது. மற்ற கவனிப்பகங்கள் (வார்டுகள்) பாதிக்கப்படவில்லை என்றாலும், மருத்துவமனையில் புகை மூட்டத்தால் சுமார் 200 பேர் வெளியேற்றப்பட்டனர் என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.